search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு கடன்"

    • ரூ.80 லட்சம் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது.
    • சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வி.ஏ.30 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கங்கள், நகர வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் தொடக்க நிகழ்வாக 8 பேருக்கு ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் முதல் கடன் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.

    அப்போது சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • திருமங்கலம் அருகே கூட்டுறவு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் கதிரவன் திட்ட உரையாற்றினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் முத்துராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்னக்கொடி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் சீனியப்பா சிறப்புரையாற்றினார். மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் கதிரவன் திட்ட உரையாற்றினார்.

    இதில் 46 பயனாளிகளுக்கு ஆடு, மாடு பராமரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடை மற்றும் விவசாய கடன் என மொத்தம் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. சங்க செயலாளர் பெருமாள்சாமி வரவேற்றார். எழுத்தர் பால்பாண்டி நன்றி கூறினார்.

    ×